கவிதை - என் தந்தையானவர்... - நர்மதா சுப்ரமணியம்
கருவறையின் பாதுக்காப்பை
உணர்ந்திருக்கிறேன்
அவரின் கைவளைக்குள்..
தாய்மடியின் ஸ்பரிசத்தை
உணர்ந்திருக்கிறேன்
அவரின் தோள் வளைக்குள்...
அன்பின் அடிவேரை
நுகர்ந்திருக்கிறேன்
அவரின் பாசப்பிணைப்புக்குள்...
அன்பின் உச்சம்
கண்டதும் அவரிடமே....
நேசத்தின் அனைத்து
பரிணாமத்தையும்
என் வாழ்வில் முதன்முதலில்
கண்டதும் அவரிடமே...
என் உரிமையாய்
என் உடைமையாய்
தாயைத் தவிர வேறோருடன்
பங்கிட்டுக் கொள்ளயியலாதென
என் வாழ்வில் முதன்முதலில்
போட்டியிட்டதும்
அவரின் அன்பிற்கே.....
உருவளித்தத் தாயின் கருவுக்கு
பாசத்தால் உயிரளித்த
உன்னத ஜீவன் அவர்...
என் முதல் நாயகன்
என் முதல் காதலன்
என் முதல் நண்பன்
பட்டத்து ராணியாய் அன்னையையும்
இளவரசியாய் என்னையும்
காத்து இரட்சிக்கும்
ஆண்டவருக்கிணையானவர்,
என் தந்தையானவர்....
{kunena_discuss:779}