கவிதைத் தொடர் - 04. காத்திருக்கும் காரிகை... - நர்மதா சுப்ரமணியம்
ஆசை மனம்
உன்னைக் காண ஆசை
நீ யாரென்றிய ஆசை....
என் பிற்பாதியாகப் போகும்
உன் பேரறிய ஆசை....
நான் வாழப்போகும்
உன் ஊரறிய ஆசை....
காதலையறிய ஆசை...
காதலிக்கப்படுவதின்
இன்ப அவஸ்தையறிய ஆசை...
என்னாசையை பூர்த்தி செய்ய
விரைவில் நீ என்னை வந்தடைய
ஆசையோ ஆசையடா எனக்கு....
{kunena_discuss:779}