(Reading time: 1 - 2 minutes)

கவிதை - காதலும் கடந்த காமமும் கடந்த உறவிது - சிந்தியா ரித்தீஷ்
love-magic

காதலும் கடந்த காமமும் கடந்த உறவிது

கலை மானாய் பிணை தேடும் ஒரு கதையில்
தடுமாறித் தடம் மாறி உருவானது

நிலையான துணையாக உணர்வது உரைத்திடினும்
நிஜம் ஒன்று இருந்து என்னைத் தடுக்கிறது

மனம் கொண்ட  வாழ்வு இதுதான் என்று தெளிந்தும்
நிலை கொள்ளா நெஞ்சம் ஏனோ தவிக்கிறது

கரை சேரும் படகாக இருந்தும் நான்
கரையேறத் தெரியாமல் தவித்திடும் மாயம் தான் என்னவோ...... . 

 

{kunena_discuss:779} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.