கவிதை - காதலும் கடந்த காமமும் கடந்த உறவிது - சிந்தியா ரித்தீஷ்
காதலும் கடந்த காமமும் கடந்த உறவிது
கலை மானாய் பிணை தேடும் ஒரு கதையில்
தடுமாறித் தடம் மாறி உருவானது
நிலையான துணையாக உணர்வது உரைத்திடினும்
நிஜம் ஒன்று இருந்து என்னைத் தடுக்கிறது
மனம் கொண்ட வாழ்வு இதுதான் என்று தெளிந்தும்
நிலை கொள்ளா நெஞ்சம் ஏனோ தவிக்கிறது
கரை சேரும் படகாக இருந்தும் நான்
கரையேறத் தெரியாமல் தவித்திடும் மாயம் தான் என்னவோ...... .
{kunena_discuss:779}