(Reading time: 2 - 3 minutes)

கவிதை - அவன் என்னுள் ஒன்றானவன் - சிந்தியா ரித்தீஷ்

friend

அவன் என்னுள் ஒன்றானவன்.

உருவம் கொடுத்தும் உணர மறுக்கும் உன்னதமானவன். 

உணர்வுகளைத்தாண்டி  ஒரு உறவாய் ஒரு நிழலில் ஒன்றாக தொடங்கி இப்பொழுது மூன்று வருடங்கள் இருக்கும்.

 தினம் தோறும் புதிதாய் தெரிகிறான் என் மேல் பூத்திடும் காதலால்.

 நிச்சயம் காதல் உண்டு அவன் மேல் எனக்கும்.

ஆனால் அது காமம் அற்ற நிர்மலமான ஓர் அன்பு.

 

அவனுள் தோன்றும் புதர்களும் அதற்கான விடைகளும் தினம் தோறும் என்னுள்ளே புதைக்கப்படுகின்றன.

 பல கதைகள் ஏன் சில கவிதைகள் வாசிக்கும்போது தோன்றும் என் மனதிற்கு அட இது நம்ம கதை போல் இருக்கே என்று.
ஆணிற்கும் பெண்ணின் உணர்வுகள் புரியும்

 அவனும் அவள் மனதை படிப்பான் அவள் முகத்தில்- என்று நான் உணர்ந்ததும் இவனால். பார்த்தவுடன் முகவளைவுகளையும்  நெளிவுகளையும் கணிப்பான் *பிறர்போல்* இல்லாமல் என் மனதினை படிப்பான்  அதைக்கொண்டே.
இன்னும் நான் அறியா பல வித்தைகளைக் கொண்டவன் அவன்- என் நண்பன் 

அவனுக்கும் எனக்கும் சொந்தம் என்றோ ஒரு நாள் தொடங்கியது 

எனினும் தினந்தோறும் என் பிரார்த்தனை என்றும் இவ்வரம் நீடிக்க வேண்டும் என

 எனக்காக ஒரு வாழ்வும் அவனுக்கான ஒரு தனிவாழ்வும் வேறாக இருந்தாலும் இது போல என்றும் அவனோடு நான் இருக்க வேண்டும்.

These  few words are dedicated for my best friend.

 

{kunena_discuss:779} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.