கவிதை - அது ஒரு அழகிய கனாக்காலம் - சிந்தியா ரித்தீஷ்
பட்டுத் தெறிக்கும் பட்டாம் பூச்சிப் பருவம்
பலகனாக் கொண்டு
ஒரு பயணம்
கல்லூரிக் கால்பதிப்பு
என்றும் எம் மனதில்
ஓர் இனிய நினைவது
இன்று ஒரு நாள்
நகர்கின்றது என் நாட்காட்டி
சில ஆண்டுகள்
பல மாதங்கள் முன்னோக்கி
ஆண் பெண் உறவு இது
புதிதான முகங்களுடன்
சிறிதான சிரிப்புடன் ஓர் அறிமுகம்
பல நாட்கள் நகர
முளைத்த நட்பும் வேருன்ற
பல் கிளைகள் பெருகி
பூத்துக் குலுங்கியது
ஓர் வேளை என் பிரம்மையோ
எனத் தோன்ற வைக்கும்
இன்று நான் தனிமையில்
புலம்பும் போது
பற் பல அனுபவங்கள்
அழியா நினைவாய்
நெஞ்சத்து வங்கியில்
செலவுக் கணக்காய்
சில காலம் வேண்டும்
இக் கணக்கை முடிக்க
தொடர்கின்றேன்...