கவிதை - கவிதையும் கதைகளும் - சிந்தியா ரித்தீஷ்
கவிதையும் கதைகளும்
ரசிக்க வந்த பக்கம் இது.....
கருத்துக்களையும் காதலிக்க
வைத்த பாவையவள்.....
அடடா இன்னும் தெரியவில்லை
பாவையோ? பூவையோ?
எவளோ? ஒருவேளை எவனோ?
எனவும் சிந்தித்தேன்....
ஆசையாய் வந்து முதலில்
என் கண் மொய்க்கும் இடம்
அவள் கருத்துப் பக்கமே.....
ஏனோ தெரியவில்லை...
இவ் வார்த்தைகளும் போதுமா என
ஆனாலும் என் மனதின் ஆசையிது
அவளிடம் கூறிட .....
சிறிதோ பெரிதோ யாரோ எவரோ
அறியாவிடினும் உரமேற்றும்
அவள் வார்த்தைகள்......
கதை கவிதைக்கு மேலாக
எனை ரசிக்க வைத்த
கருத்துக்களின் காதலி அவள்
பேரும் ஊரும் எது எனவும்
தெரியாது ஆனாலும்
ஊறுகின்ற உற்சாகம் பாதி
அவளின் வாசகங்களினாலே.....
என்னுள்.........
சிலவேளை சிரிப்பாள் சிலவேளை முறைப்பாள்
காதில் புகையும் உருவாக்கி
உடனே கலகலப்பாள்......
சில முக வர்ணனையால்......
இத்தனைக்கும் அவள் கருத்துக்களின்
காதலி நான் ......
This poem is dedicated to Adharv Jo
{kunena_discuss:779}