கவிதை - கண்ணீர் நதியாய் - சிந்தியா ரித்தீஷ்
நிலவும் கவிபாடும்
நீல வானம் தாலாட்டும்
வண்ணக் குமிழ் விளக்காய்
மின்மினுக்கும் விண்மீன்கள்
வானக் கூரையின் கீழ்
பூமிப் பாய் விரிக்க
புல்வெளி மெத்தையிலே
குளிர் காய்கிறது
குட்டிப் பனித்துளி ஒன்று....
பிஞ்சுக் கைகளும் கால்களும்
மேடையில் நர்த்தனமாட
மெதுவாய் உதைக்கையில்
பூமிக்கு வலிக்கத்
தான் அதைத் தாங்காமல்
வீரிட்டு அழுகிறது....
அழுகுரலும் அனுகலாய் வெளியேற
புதுயுகமா இல்லை புதைகுழியா
தெரியாமல் திகட்டுகிறது
இதன் மனமும்...
கண்ணீர் நதியாய்
அடடா அச் சிறு பிஞ்சின்
சிற்றோடை அது
பிறந்து சிலமணியில் இவ் உலகம் கொடுத்தது
பசியின் கொடுமையே..
ஏங்கும் இக்குரலின் ஏக்கம் பெரிதோ ..
என் தொண்டை அடைக்கும்
இதில் சில வரிகள்
இல்லை வலிகள்...
நான் புரட்டிய நாளிதளில்..
என் நயன நளினத்தின்
விளைவினால்...
{kunena_discuss:779}