(Reading time: 1 - 2 minutes)

கவிதை - அது ஒரு அழகிய கனாக்காலம் - சிந்தியா ரித்தீஷ்

friends

அன்றொரு நாள்..........
நாங்கள் நால்வர்
நல்ல நண்பர்கள்
கடைசிவரையென 
நம்பிக்கொண்டேன்

ஆனாலும் சில சிக்கல்கள்
என் தலையும் சிக்கித்தவிக்கும்
சிலவேளை.....
சிலந்தி வலைபோல


சந்திப்புக்கள் பெருகின 
சண்டைகளும் கூடவே
நாட்கணக்கில் கூட 
அடங்காத அலுவல்கள்
பேசிச் சிரிக்கவென பற்பல

சங்கதிகள் அணைகடக்கும் 
உதவிக்கு அழைக்கத் தேவையின்றி  

ஒரு கரம் நீளூம்
தலை வலித்தால்
தலை கோத ஒரு கரம்
மடி சாய்க்க மறு முகம் என 

தங்கமாய்க் கடந்த நாட்கள்
அவை....


புயல் வந்து தாக்கும்
என தெரியாத தருணங்கள் கூட 
பூத்துக்குலுங்கியது
எம் நட்புத் தோட்டம்
இன்னும் பல கதைகள்
என் பட்டாம்பூச்சிச்
சிறகு தனின் பல வண்ணங்கள் 
போல....

தொடர்கிறேன்......

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.