கவிதை - என்ன மாயம் செய்தாய் நீ - சிந்தியா ரித்தீஷ்
என்ன மாயம் செய்தாய் நீ
எங்கோ அலைந்து
திரியாய் திரிந்து
தொலைந்து ஒழியும் கணத்தில்
நிலவின் நிழலாய் வழியில் வந்தாய்
குளிரும் தட்பம் கொடுத்து குதித்தாய்
கண்கள் குளமாய் நிரம்பி வழிய
துள்ளித் துடிக்கும் மீனாய்
என் கருவிழி மறைக்கும்
நீர்ப்படலம் வழியே தெரிந்தாய்
அலையில் தெளியும் நிழல்படம் போல
வெண்மதி மறைக்கும்
வான்மேகம் போல என் கருத்தை
மறைத்து கிடக்கின்றது எதுவோ ஒன்று அறியத் துடிக்கும் அகல மறுக்கும்
உன் ஞாபக குப்பையை கிளறுகின்றேன்