(Reading time: 1 - 2 minutes)

கவிதை - ஒளி தருவாயா - K.சௌந்தர்

giveMeLight

இன்றேனும் ஒருமுறை உன்னை பார்த்திடுவோம்

என்ற எதிர்பார்ப்பில் விடிகிறது என் இரவு .

ஆனால் நாள் முழுவதுமே உன்னை பாராத சோகத்தில்

இடிந்து உடைந்து முடிகிறது என் பொழுது.

உன் வாழ்வில் சில துளியானது என் வரவு.

என் வாழ்வையே சிறு துகளாக்கியது  உன் நினைவு.

உன் ஒரு பார்வையில் சோலைவனமாகும்

என் வறண்ட பாலை வாழ்வு

நீ கடந்து சென்றால் நூறு  மின்னல் கடந்த அதிர்வு`

என் கண்களுக்குள் நுழைந்து இதயத்தில் விழுவதால்

இடிந்து போகிறேன் நான்

என் மனம் உனக்கு புரியுமா நான் புரியவைக்க ஒரு வழி கிடைக்குமா

நீயும் என்னை நேசிப்பதாய் என் நெஞ்சம் சொல்வது நிஜமாகுமா

உன்னை  மறக்கவும்  மனம் வரமால்

வேறு வாழ்வை நினைக்கவும் முடியாமல்

உன்னையே சுற்றி வரும் இந்த நிலவுக்கு

ஒளி தருவாயா  என் சூரியனே

 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.