(Reading time: 1 - 2 minutes)

கவிதை - நினைவில் நின்ற அந்த நாள். .. - சு.இராமகிருஷ்ணன்

memories

அந்த நாளில்...

நினைத்து பார்க்கவில்லை 

மகிழ்ச்சியான தருணத்தை 

புன்னகை பூத்த பூவும்

புலம்பியதே ! 

பூத்து குலுங்கியது புன்முறுவலுடன் 

மறு நொடியில்  ! 

மனதால் உரையாடிய 

நாளிகை இனித்தது  ;

இறையும் இசையுமாய்

நின்ற  ஒரு பொழுதில் 

இன்புற்றது ஓர்  இதயம்  !

இரவுகளும் கடந்தது  !

பொழுதுகளும் விடிந்தது  !

நிலவுமகள் துயிலுகையில் 

நெஞ்சகமும் பதைத்தது !

இன்பநிலாவை காண -தயக்கத்தில் 

இதயமும் ஏங்கியது ;

தென்றலாய் ஒரு பரவசம் 

பங்குனி வெயிலில் பாய்ந்தது  !

சந்திக்கும் நொடி கணவா ? இல்லை நினைவா ?

விண்ணில்  பாதங்கள் மிதந்தது  !

மனம் விட்டு பேசிய மனதை 

மனதார வாழ்த்தியது!

ஆசைகள்  ஆயிரம் இருந்தாலும் 

ஆலய மணியும் ஒலித்தது  !

பண்போடு உரையாடிய தருணத்தில் 

பகலவனும் , நொடிகளும் நகர்ந்தது  ;

உணர்வுதான் உறவே என்றதும் 

உறவையும் நீ புரிந்தது  !

மனம் தான் விடைபெற நினைத்தாலும் 

மகிழ்ச்சியான தருணம் தடுத்தது!

இருந்தும் உள்ளங்களால் அல்ல!

உதடுகளால் மட்டுமே விடை பெற்றது  ! 

மீண்டும் அந்த நாட்களுக்காக ...

 

{kunena_discuss:779} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.