கவிதை - நினைவில் நின்ற அந்த நாள். .. - சு.இராமகிருஷ்ணன்
அந்த நாளில்...
நினைத்து பார்க்கவில்லை
மகிழ்ச்சியான தருணத்தை
புன்னகை பூத்த பூவும்
புலம்பியதே !
பூத்து குலுங்கியது புன்முறுவலுடன்
மறு நொடியில் !
மனதால் உரையாடிய
நாளிகை இனித்தது ;
இறையும் இசையுமாய்
நின்ற ஒரு பொழுதில்
இன்புற்றது ஓர் இதயம் !
இரவுகளும் கடந்தது !
பொழுதுகளும் விடிந்தது !
நிலவுமகள் துயிலுகையில்
நெஞ்சகமும் பதைத்தது !
இன்பநிலாவை காண -தயக்கத்தில்
இதயமும் ஏங்கியது ;
தென்றலாய் ஒரு பரவசம்
பங்குனி வெயிலில் பாய்ந்தது !
சந்திக்கும் நொடி கணவா ? இல்லை நினைவா ?
விண்ணில் பாதங்கள் மிதந்தது !
மனம் விட்டு பேசிய மனதை
மனதார வாழ்த்தியது!
ஆசைகள் ஆயிரம் இருந்தாலும்
ஆலய மணியும் ஒலித்தது !
பண்போடு உரையாடிய தருணத்தில்
பகலவனும் , நொடிகளும் நகர்ந்தது ;
உணர்வுதான் உறவே என்றதும்
உறவையும் நீ புரிந்தது !
மனம் தான் விடைபெற நினைத்தாலும்
மகிழ்ச்சியான தருணம் தடுத்தது!
இருந்தும் உள்ளங்களால் அல்ல!
உதடுகளால் மட்டுமே விடை பெற்றது !
மீண்டும் அந்த நாட்களுக்காக ...
{kunena_discuss:779}