கவிதை - நிஜமாகுமா?? நித்திரை மரணம் - சு.இராமகிருஷ்ணன்
கருவறையில் உள்ள வரை
கற்பனைக்கு இடமில்லாமல்
வாழ்ந்தேன் !
கருவை விட்டு வந்த பின்பு
கற்பனையாகவே
வாழ்கிறேன் !
கற்பனையும்
கலைந்துவிடுமோ -என்ற
அச்சம் !
கண்விழித்து பார்க்கையில் - அது
நித்திரையின் எச்சம் !
நித்திரையும் சில நாளிகையில்
நிஜத்தின் மிச்சம் !
இவ்வுலகில் நிஜம்தான் - என்
வாழ்வின் பஞ்சம் !
நான் வாழும் வாழ்க்கையில்
விதியே துஞ்சம் !
மதியினால் வென்றாலும் வினையே விதியின் தஞ்சம்!
வினைதான் இறுதி வாழ்வின் மரணத்தின் உச்சம்!!
{kunena_discuss:779}