(Reading time: 1 - 2 minutes)

கவிதை - வாராயோ காதலே... - நா.நாகராஜ்

love

 

ஆண்டுகள் கடந்த காதல் உள்ளத்தில் கலக்கம் ஏனடி...

காயங்கள் தான் தீர்வென்றால் இந்த காதலும் நமக்கு ஏனடி...

கடலும் அலையுமாய் வாழ்ந்த நாம்

காகிதப் படகாய் கவிழ்வதும் ஏனடி..

விடைகள் இல்லா கேள்விகளுக்கு நாம் கொள்ளை போவதும் ஏனடி...

மரணம் வெல்லும் காதலை மண்ணோடு புதைப்பதும் ஏனடி...

காரணங்களில் என்னை கட்டிப் போடாதே  கண்மணியே...

காலம் இறந்தாலும் உனக்கான காதலனாய் காத்திருப்பேன் ...

வேற்றுமை இல்லா நம் காதலில் சாக்குகள் வேண்டாம்...

உறங்கா விழி கொண்டு வாழ்கிறேன் நீ மீண்டும் வாராயோ காதலே...

 

{kunena_discuss:779} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.