கவிதை - காதலும் மாயையே... - நா.நாகராஜ்
வளர்பிறை மாந்தர்கள் எல்லாம் வாலிபம் பூக்கும் போது..
அலைகடல் அளவாய் ஆசைகளை ஹார்மோன் தூண்ட...
தம் பிம்பங்களை தானே ரசிக்கத்துவங்கி...
தானே அறியா மாற்றங்களை ஏற்று...
இருபாலரும் தம் இறுதி கொள்கைகளை உணர்ந்து...
துணை தேடுதல் வேட்டையில் கலந்து..
இமைப்பொழுது முடிவில் ஏகாந்தம் கண்டு...
இவை யாவும் சிற்றின்பம் என அறியாமல்..
உறங்கா உரையாடல் கொண்டும் மோக வானில் பச்சை பூங்காவனம் செய்தும்...
எண்ணற்ற குழப்பம் கவர்ந்தும் ஏதும் புரியா உணர்ச்சிகள் கொண்டும்...
சில நாள் வாழ்ந்த எம் போன்ற பறவைகளேள்ளம்..
சிறிதோர் திருப்பத்தில் யாவும் இயர்கையென ஏற்று...
மனம் மாறி இறுதி இல்வாழ்க்கை துணைக்கு காத்திறுபதிலே சுகம் கண்டு..
முடிவில் தாம் கொண்ட உணர்ச்சிகளை ஒற்றைச் சொல்லில் முடித்துவிட ' காதலும் மாயையே.....'!!!
{kunena_discuss:779}