கவிதை - பிரியும் நொடிகள் - நா.நாகராஜ்
அந்திப் பொழுதில் அவரவர் கூட்டினை நோக்கிய அன்புப் பயணம்..
அது ஓர் ஆரவாரம் இல்லாத பேருந்து...!!
அருகருகே இருக்கைகள் அமைந்திட
சர்கரங்கள் மெல்ல நகர்ந்தன...
சிற்றுண்டி முடித்து சிந்திய துளிகள் அவள் துப்பட்ட துடைத்து முடிக்க
சிறுநகை கொட்டிக்கொண்டு சிறிதாய் தொடங்கிற்று அவள் மொழிகள்..
இனிமயாய் பொழுது நகர்ந்தது இன்னிசை பொத்தான் ஏதுமின்றி...
எதர்த்தமாய் சென்ற நேரம் சட்டென்று ஏனோ அன்புப் போதையில் மூழ்க...
சலனம் இல்லா மௌனமும் சிறிது தேவையாய் போனது...
சர்கரமும் சரியாய் அதன் வேலையை செய்திட
கரம் கோர்த்து விடை கொடுத்து வழி அனுப்புகிறாள் இறுதி நிறுத்தத்தில்..
கனத்த இதயத்தை சற்றே கசக்கிட்டு...
{kunena_discuss:779}