கவிதை - மெய்ப்பித்தால் காதலை - நா.நாகராஜ்
கீழ்வானம் சிவந்து கிடந்த வேளை..
கிழக்கு கடற்கரை காற்று ஈரம் சேர்த்த நேரம்
பல மணிநேர காத்திருப்பும் பலன் தந்தது..
பக்கத்து இருக்கையும் நிறைந்து போனது..
அவள் வந்தடைந்தாள் என் அருகே..
மீளா பொழுது சென்றுகொண்டிருக்க..
மௌனம் களைத்தால் மின்னும் பார்வையோடு...
மீண்டும் ஒர்முறை என் காதல் ரோஜா அவள் கரம் சென்றது...
மீண்டும் அதே குப்பைக்கூடை நோக்கியே..
மறு நொடியில் வந்தடைந்த பாதை நோக்கி..
அழியா அவள் கால் தடத்தில் நானும் பின்னே...
மற்றொரு இருக்கை அவள் எனக்கு கொடுத்தால்..
நாணம் உடுத்திய முகத்தோடு இம்முறை மௌனப்போர் புரிந்தால்..
ஊமையாக என் காதல் மொழி ஊற்றெடுக்க
உறைந்து போன யம் இமைகள் துறந்த போது உணர்ந்ததும் நித்திரை சொப்பணமே
{kunena_discuss:779}