கவிதை - பெண்ணே! - மித்ரா
தாய்,
நீ எனக்கு கிடைத்த வரம் என்றும் !!
தந்தை,
நீ என் தேவதை என்றும் !!
சகோதரன்,
நீ என் விளையாட்டு பொம்மை என்றும் !!
சகோதரி,
நீ என் தோழி என்றும் !!
எல்லாமுமாக பாவித்து ஒரு இளவரசியாக,
இருந்தும்,
கணவன் வீட்டில் இந்த உறவுகள் அனைத்துமாக
நீ இருக்க வேண்டும் !!
என்று எதிர்பார்க்கும் இவ்வுலகம்,
அவளின் விருப்புவேறுப்புகளை மறந்து,
ஒரு ஆணின் அடிமையாக,
இருக்க வேண்டும் என்றே எதிர்பார்கின்றது.
இது ஒன்றும் அவளுக்கு பெரிய பொறுப்புகள்
இல்லையே, அவளால் அன்புடன் செய்ய முடியும்.
இருப்பினும், அவளைச் சுயமாக செயல்பட
அனுமதிக்க முடியுமா?
"பதில் இல்லை"
பெண்களை பலவீனமாக கருதும், மானிட
பதருகளே, முட்டாள்கள் நீங்களே !!
பெண்களின் சக்தியே, திறமையை,
இவ்வுலகிற்கு வெளிக்கொணர,
முடியாவிடினும். அதைத் தடுக்க
முயற்சிக்காதிர்கள் !!
அவர்களின் வளர்ச்சியே குடும்பத்தை
வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லும் !!
பெண்ணே !! நீ கோழை இல்லை !!
நீ எப்போழுதும் ஒரு முன்னோடியே !!
பெண்களின் உணர்வுகளை குத்திக்
கிழிக்கும், இச்சமுக அவலங்களை
களைந்தெடுக்க, பாரதி கண்ட
பெண்ணாக மாறுவதில் தவறில்லை !!
இன்று உன்னை பேசும் சமுகம்
நாளை இன்னொரு தலைப்புச்
செய்திக்குக் காத்திருப்பதை மறக்காதே !!
உனக்காக வாழ் !! உன்னை, உன்னுடன்
உள்ள குணங்களுடன் ஏற்று கொள்பவரிடம்
விட்டு கொடுப்பதில் தவறு ஒன்றும் இல்லை!!
வாழக் கற்றுக் கொள் !!
உனக்காக !! உனக்காகவே !!
பெண்ணே !!
{kunena_discuss:779}