கவிதை - வரம் - K ஹரி
எத்தனையோ உணவுகள் இருந்தாலும்
உன் கை கொடுக்கும் விருந்திற்கு ஈடாகவில்லை!
எத்தனையோ நாடகங்கள் நடித்தாலும்
என் ஏக்கங்களும் வருத்தங்களும் உன்னிடம் மறைபடவில்லை!
எங்கோ எதற்கோ எடுத்த முடிவுகள் கூட
உன் முன் மண்டியிட்டு உன்னைவிட பெரிதாக காட்டவில்லை!
எத்தனையோ உறவுகள் என்னை சுற்றி இருந்தாலும்
உன்னுடன் இருக்கும் தனிமையைவிட பெரிதாக தோன்றவில்லை!
அடுத்த வீட்டு ராணியாய் சென்றாலும்
உன் மகள் எனும் கர்வத்திற்கு ஈடாகவில்லை!
இன்று நான் உனக்கு வரம் எனில்
அடுத்த ஜென்ம வரமாய் உன்னை சுமக்க ஆசைதான் அம்மா !!!