கவிதை - வேற்றுமை - சாஹித்யா
அனைவரையும் தாங்கியது அன்னையின் கருவறையே!
எவராயினும் முதல் ஒலி அழும் ஒலியே!
பசிவரின் முதல் அமுதம் தாய்ப்பாலே!
வேதனையின் முதல் குரல் அம்மா என்பதே!
ஆடி அடங்கியப்பின் நமதென்பது ஆறடி நிலமே!
இவையனைத்தும் யாவருக்கும் ஒன்றெனில்,
இப்பிறப்பினில் வேற்றுமை ஏது?