கவிதை - அழகு அசிங்கம்-அவள் பார்வையில் - ப.கலைச் செல்வி
உடமையற்ற பெற்றோர்
உறவினர் சிலர் மட்டும்
விட்டெந்தறி விவாகம்
முதல் சந்திப்பு தனிமையில்
மறந்தது தன்னிலை
மதுவால் அவரும்
மறைக்கப்பட்ட உண்மையால் நானும்
உணர்வு மிருதுவாய் -அல்ல
புணர்ச்சி மிருகமாய்
இதுதான் விதியென
இரண்டு பிள்ளைகள்
பாராமுகம் - ஏன்
குடும்பபாரம் என
வருவது நின்றது
வருமானம் கூட
வேலைசெய்ய அஞ்சவில்லை
ஒருவேளை உணவிற்காய்
தொடரும் இன்னல்கள் என்
மின்னல் வனப்பால்
அழகாய் பிறந்ததால்
அசிங்கப் படுகிறேன்
{kunena_discuss:779}