(Reading time: 1 - 2 minutes)

கவிதை - அழகு அசிங்கம்-அவள் பார்வையில்  - ப.கலைச் செல்வி

beautyUgly

உடமையற்ற பெற்றோர்

உறவினர் சிலர் மட்டும்

விட்டெந்தறி விவாகம்

 

முதல் சந்திப்பு தனிமையில்

மறந்தது தன்னிலை

மதுவால் அவரும்

மறைக்கப்பட்ட உண்மையால் நானும்

உணர்வு மிருதுவாய் -அல்ல

புணர்ச்சி மிருகமாய்

 

இதுதான் விதியென

இரண்டு பிள்ளைகள்

பாராமுகம் - ஏன்

குடும்பபாரம் என

வருவது நின்றது

வருமானம் கூட

 

வேலைசெய்ய அஞ்சவில்லை

ஒருவேளை உணவிற்காய்

தொடரும் இன்னல்கள் என்

மின்னல் வனப்பால்

 

அழகாய் பிறந்ததால்

அசிங்கப் படுகிறேன்

 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.