(Reading time: 1 - 2 minutes)

கவிதை - சிலையான நிலை  - ப.கலைச் செல்வி

wetHeart

ஆழ்ந்த சிந்தனை

அமைதியற்ற நிலை

வார்த்தைக்கு விடுதலை

கண்ணுக்கு திரை

 

நெஞ்சின் ஓரம்

நெடுந்தூரப் பயணம்

புதைந்த புதையல்

பிரிக்காத சிப்பி

சிதைத்துப் பார்த்தேன்

 

தேவையற்ற தேடல்கள்

வேண்டாமென மூடும்முன்

உள்நுழைந்த உன் உணர்வு

மூர்ச்சையாயின என்னுள்

 

உணர்ந்தேன் உன்னுள்

உதித்து என்னுள்

மரித்த உணர்வுக் குவியல்

 

புரிந்தது புண்ணான

இதயம்

புதிரான என்னால்

 

ஈரமான இதயம்

சிலையான என் நிலை

 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.