(Reading time: 1 - 2 minutes)

கவிதை - எங்கே எனது கவிதை - கலை யோகி

whereLove

சின்ன சின்ன வார்த்தைகள் கோர்த்து...

சிகரம் தொடும் கற்பனை ஊற்றி..

பார்வையில் ஆயிரம் பன்மொழி பேசி..

பற்றிய கரங்களில் பண்பதை போற்றி.....

விழிகள் நான்கென பிரிந்தாலும்.....

திசைகள் ஒன்றான நாள் வாழ்த்தி....

 நான் வாழ வழி விடுத்து...

என்னாளும் எனை மறவாது..

என்றன் நலமதை வேண்டிடும் கவிதை எங்கே..... 

என்றன் கருவிழியின் கனவுகளை களவாடிச் சென்ற கவிதை எங்கே..

எங்கே? என்றன் இன்னுயிர் வேண்டும் கவிதை எங்கே?????

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.