(Reading time: 1 - 2 minutes)

கவிதை - மறக்க முடியவில்லை - கலை யோகி

forget

கண்களை பார்த்து நீ காதல் சொல்லிய அந்த கணம்....

நெற்றியில் திலகமிட்டு

 உரியவன் நீயென்று 

சொல்லாமல் சொல்லிய 

அந்த தினம்.....

வாங்கி நீ தந்த வாச மலரினை  வகுப்பு தோழிக்கு வகுத்து நான் கொடுத்திட வாடிய 

அந்த அழகு முகம்......

கன்னத்தை நீ நனைக்க கடிந்து நானுனை முறைக்க கால் தொட்டு சென்றாயே அந்த குணம்....

உன்னை நான் கணாமல் வெற்றிடந் தன்னில் என் பார்வை வீற்றிருக்க வீங்கிட அறைந்தாயே கன்னந்தனில் அந்த சினம்..... 

நான் மட்டுமல்லாது எனை ஈன்றோரின் இன்பம் கூட முக்கியமாய் கருதி எனை‌க் கதறி ஆழவிட்டுச் சென்ற அந்த மனம்.... என்று எதையும் மறக்க முடியவில்லை...... மறந்ததாய் நடிக்க கூட விடவில்லை நீ என்னை....................

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.