கவிதை - உரைத்து செல்லடா... - கலை யோகி
ஒரே ஒரு முறை உரைத்து செல்.....
உன்னில் நான் உயிராய்
இருந்தது உண்மையென்று....
எனக்கான கனவினை கண்டது
நீ என்பது நிஜமென்று....
மணி கனக்காய் பேசாவிட்டாலும்
மனமாற பேசியவை மெய்தானென்று......
உன் உற்ற உறவுகளிடம்
உன்றன் உயிர் துணை நான்தானென்று உரக்கச் சொல்லியதெல்லாம் உண்மை
தானென்று.... உரைத்து செல்லடா ஒரு முறையேனும்......