கவிதை - நீயும் நானும் வேறா - கலை யோகி
நீயும் நானும் வேறா_அந்த
நிலவும் வானும் வெவ்வேறா...
காற்றை கிழித்து....
மலையை பிளந்து...
கரமதை பிடிப்பேன் என்றாயே..
வெறும் கற்பனைக் கதையாய்
ஆனாயே....
என்றன் காதலை கூட
வெறும் கானலாக்கி
போனாயே....
ஒருநாள் இல்லை
ஒருநாள் உன்னை
தேடி வருவேனே...
என்றன் உயிர் நீயே
என்பதை உணர்ந்திடச்
செய்வேனே.......