கவிதை - ஏக்கம் - ரம்யா
உயிரே உனக்காக காத்திருக்கிறேன்
என் வயிற்றில் விளையாடி
உன் பிஞ்சுக்காலால் எட்டி உதைத்து
வெளியே வந்தபின்
என் முலைபற்றி உன் சின்ன வாயால்
நீ செய்யும் சிங்காரம் காண காத்திருக்கிறேன்
என் இரவு தூக்கம் கலைத்து
மடியில் தவழ்ந்து
நான் விழிக்கும் நேரம் நீ தூங்கி
என்னை சிணுங்க வைக்கும் உன்
குறும்பு காண காத்திருக்கிறேன்
கண்மணியே
கோபம் தெரியாமல்
புகழ்ச்சி புரியாமல்
நண்பர் பகைவர் பாராமல்
நீ பறிமாறும் புன்னகை காண
காத்திருக்கிறேன்
தூக்கத்தினல் உன் அமைதி
உன் இதழில் பூக்கும் குறுநகை
பிஞ்சு விரல்கள் போடும் தாளம்
சின்ன வயிறு போடும் ஒயிலாட்டம்
எல்லாம் உன்னருகில் இருந்து இரசிக்க
காத்திருக்கிறேன்
வா உயிரே விரைந்து வா
ஏக்கத்துடன் உன் அம்மா
{kunena_discuss:779}