கவிதை - சிவப்பு - ரம்யா
என் இனியவனே
இந்த இரவை சிவப்பாக்க வா!
உன் விரல் தீண்டலில்
சிவக்கட்டும் என் கன்னம்!
உன் நகக்கீரலில்
சிவக்கட்டும் என் தேகம்!
உன் முத்தத்தில் மூழ்கி
சிவக்கட்டும் என் இதழ்கள்!
உன் பல் பதிப்புகளால்
சிவக்கட்டும் என் இடை!
இரவெல்லாம் விழித்திருந்து
சிவக்கட்டும் கண்கள்!
நம் காதல் தந்த போதையில்
சிவக்கட்டும் அந்த வானம்!
{kunena_discuss:779}