(Reading time: 1 minute)

கவிதை - கதிரவன் - ரம்யா

sun

கிரணக்கைகளால் காசினியை கண்மலர்த்தும் கதிரவனே!

உயிர்களுக்கெல்லாம்  உணர்வூட்டி உயிரூட்டும் அன்னை நீயே

வேற்றுமை பாராமல் வெளிச்சப்புன்னகை சிந்தும் மழலை நீயே

சீறிப்பாய்ந்து சிறுமை சினந்து சிறுவலி கொடுக்கும் அப்பன் நீயே

பூமி வானம் காதல் கொள்ள கண்டு சிவந்து சிரித்து கடலுள் மறைவாயே

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.