கவிதை - களவியல் - ரம்யா
கருத்தில் கலந்த கண்ணாளா களவியல் கற்க
கனவுகள் மட்டுமே சுமந்து வந்தேன்
காதல் மடமையோடு உள்ளே நுழைந்தேன்
உன்னை சேர்ந்த அந்த ஒரே இரவில்
இலக்கணம் முழுதும் கற்றுத்தெளிந்தேன்
மீண்டு மீண்டும் கற்றலில் துலைந்தேன்
இன்று உன்னை மிஞ்சும் சீடனானேன்