(Reading time: 1 minute)

கவிதை - மடிகணிணி - ரம்யா

இரவோடு நீ என் மடியில்

பகலில் நான் உன் அணைப்பில்

நித்தம் பிரியாமல்

இமை மூட முடியாமல்

எந்நாளும் எனை ஆள்பவளே!

என் சிறுவிரல் தீண்டலில்

முகமெல்லாம் சிரிக்கிறாய்

பின் தடவிப்பரிமாற

கலைகள் பல காட்டுகிறாய்

உககெலாம் உறவெலாம்

 என் கண்முன்னே திறக்கிறாய்

கை அமர்த்தி உன் விழி மூட

அழகாக உறங்குகிறாய்

என் பிரிய  அதிசயம் நீ

என்னை பிரியா மடிகணிணி

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.