(Reading time: 1 minute)

கவிதை - கல்யாண கனவுகள்...! - சந்யோகிதா

marriageDreams

ஓயாமல் சிரிக்கும் என் இதழ்கள்

எதிரில் யாரும் இல்லாமலே..!

அலைந்தோடும் என் விழிகள்

எட்டாத்தொலைவில் நீ உள்ள போதும்..!

இம்சிக்கும் என் இயற்கை நாணம்

இனிய கல்யாண கனவுகளில்..!

நிச்சயதார்த்தமது பெற்றோர் செய்து

நெடுந்தூரமதில் நமக்கான நாள்  குறிக்க..

நாட்காட்டியின்பால் விரோதம் கொள்கிறேன்.. 

விரைந்தோட வேண்டி...!!!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.