(Reading time: 1 - 2 minutes)

கவிதை - விலகி நிற்பதேனோ..? - சந்யோகிதா

couple

வெந்தனல்கதிரை விலைபேசும் 

வெண்ணிலா நானறிந்ததுண்டு!

மண்ணை மணமாக்கும் 

மலர்க்கொடிகள் நானறிந்ததுண்டு!

காதல்பேசி கவிதைகூறும் 

காணொலிகள் நானறிந்ததுண்டு!

இதயத்தை வருடிப்போகும்

இன்னிசை நானறிந்ததுண்டு!

என்னிடத்தில்.....

முகவரியறியா நாணம் தந்து

முகம்மறைத்து மதி மயக்கி

காதல்பேசாமல் கவிதை தந்து

இசையின்றி இதயம் வீழ்த்தி

சாகசங்கள் நீ புரிந்தாய்...!!!

அருவியின் இரைச்சல் 

என் இதயத்தில்..!

ஆழ்கடலின் மெளனம் 

உன் இதயத்தில்..!

இசையெழுப்ப வீணை காத்திருக்க

இனியவன் நீ விலகி நிற்பதேனோ..?

விரைந்து வா என் மன்னவா....!!!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.