(Reading time: 1 minute)

கவிதை - ஊழிய அலுவலுக்கோர் மடல் - சந்யோகிதா

job

என் தவத்தின் வரம் நீ

என் வாழ்வின் சாபமும் நீ

என் தனிஅடையாளம் நீ

என் அதிஆக்கிரமிப்பும் நீ

என் ஆசைச்செம்மல் நீ

என் வெறுப்புத்தனலும் நீ

என் புண்ணியதலம் நீ

என் கண்ணீர்நதியும் நீ

மறுக்க நினைத்தும்

மறக்க நினைத்தும்

மதுபோதையாய் என்

மதியை ஆட்கொள்கிறாய்..

எனைப் பற்றித் தொடரும்

உன்னிடம் விடைபெறும் 

என் அகவை கொண்டாட

அணுவணுவாய் கடக்கிறேன் 

எதிர்ப்படும் நாழிகையை..!

இப்படிக்கு

-ஊழிய சிப்பந்தி

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.