கவிதை - காதலிக்கிறேன்..! - சந்யோகிதா
'காதலிக்கிறேன்'
ஒற்றை வார்த்தை காவியம்
போதவில்லை எனக்கு
என்னன்பை பறைசாற்ற...!
அகிலம் நிறைந்த காற்றாய்
ஆட்சி செய்கிறாய் எனை நீ
எட்டா தொலைவிலிருந்தே..!
ஒன்றுமறியா பாலகனாய்
எனை பரிதவிக்க வைக்கிறாய்
தொடர்பில்லா பொழுதினில்..!
முற்றுமறிந்த குமாரனாய்
நாணத்தில் நிலம்நோக்க செய்கிறாய்
தொலைத் தொடர்பினில்..!
என் காதற்கருவே...
என் நாணம் துடைத்து
எந்தன் மடியினில்
துயில்கொள்ள வாராயோ..?
{kunena_discuss:779}