கவிதை - என் கடிகாரமுள் நீ..! - சந்யோகிதா
உனை எண்ணியே சுற்றுகிறது
என் கடிகாரம்..!
உன்னிடம் உறவாடவே தவிக்கிறது
என் மொழிகள்..!
என் வாசலில் மணத்தூது ஏந்தி
உன் காலடி பதியும் நன்னாளில்...
விழிகளால் எனை சிறை செய்வாயோ?
இதழால் புன்னகைத்து மலர்வாயோ?
நம் விழிகள் கலக்கும் நொடியில்...
என் உள்ளம் கடல் சேர்ந்த நதியாகுமோ?
வரம் பெற்று பிறவிப்பயன் காணுமோ?
நம் இதழ்கள் உறவாடும் நொடியில்...
என் செவிகள் இசை மழையில் நனையுமோ?
கண்ணன் ஊதிய புல்லாங்குழலாகுமோ?
தாய்மொழியிடம் நான் யாசிக்கிறேன்..!
நாணம் வென்று நானும் உன்னிடம்
என் மனம் உறைக்க என் துணை நிற்கவே..!!!