கவிதை - உனைத் தேடும் நான்..! - சந்யோகிதா
நொடிகளென்ன வரம் பெற்றதோ..?
ஒவ்வொன்றும் யுகமாய் கழியுதே..!
வார்த்தையென்ன தவம் புரிந்ததோ..?
உனை வர்ணிக்க மொழிதேடுதே..!
அகவை ஐந்தைந்தில் நானறியா
பரவசம் மூன்று திங்களில் நீ காட்ட..
வான்மழை தேடும் நானிலமாக
நானும் உனக்காக மன(ண)வாசலில்..!