கவிதை - மறுபிறப்பில்...! - சந்யோகிதா
நான் நானாகவே முயன்று
தொலைந்த என்னைத் தேட
நன்மதியும் உன் முகம்
காட்ட நாணம் கொண்டேன்..!
ஓயாமல் உன் பேச்சு என்
இதழ்கண்ட காலம் கழிந்து
மனம் நிரப்புகிறேன் தோழா
உன்னுடன் என் உரையாடலை..!
என் செயற்சிந்தனை மதிமகுடம்
எல்லாம் நீயாகி நிற்கிறாய்..!
மன்னவனாய் நீ மாலையிட
மனையேற நான் காத்திருக்கிறேன்..!
காத்திருப்பும் ஏமாற்றிப் போகுமோ..?
என் நெஞ்சம்தான் தாங்குமோ..?
நீ நிராகரிக்கும் இப்பிறப்பு
அங்கீகரிப்பின்றி தீச்சுவாலை காணும்..!
உன் கரம் கோர்க்க விதிவென்று
வருவேன் நானும் மறுபிறப்பில்..!!