(Reading time: 1 - 2 minutes)

கவிதை - என் நாமமும் நினைவுள்ளதோ..? - சந்யோகிதா

ourLove

அலைகடலாய் எந்தன் நெஞ்சம்

நேசமெனும் ஈர்ப்பில் அலைபாய

அங்கமெல்லாம் உன் நினைவுகள்

அணுத்துகளின் நொடியிலும்..!

 

மைல்களுக்கப்பால் மாதங்கள் 

மணிகளுக்குள் ஒழிய தவம் நான்புரிய

மன்னவன் உந்தன் நெஞ்சில்

என் நாமமும் நினைவுள்ளதோ..?

 

விழிகளில் உன்முகம் நிரம்பி

செவிகளில் உன்மொழி புகுந்து

மதியினில் உன்மர்மம் மறைந்து 

மனதையும் இதமாய் ஆட்கொள்கிறாய்.!

 

விருப்பம் உன்பால் வேரூன்றி

விருட்சமாய் நாளும் வளர

விந்தையாய் என்மனம் தயங்கி

விதியின் வெற்றி எதிர்பார்ப்பதேனோ?

 

விதியின் வலிமை என் வசமாக

விதையாய் உன்னுள் நான்விழ 

மண விழாவை மனதினுள் 

நாளும் ஒத்திகை நான் 

காண்கிறேன் நாணத்துடன்..!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.