கவிதை - தவறிய பொற்காலமது..! - சந்யோகிதா
நம் கண்கள் காணொலியில்
களவு கொள்ளும் வேளை..
என் நெஞ்சில் ஆயிரம்
மின்னல் ஒளிகீற்றுகள்..!
மலையாய் நான் கொண்ட வீரமதை
நாணமேகம் நொடியில் மறைத்ததுவே..!
தென்றலாய் உன் குரல் செவிவருட
மலராய் நானும் மலர்ந்தேனே..!
கைதவறிய கண்ணாடியாய்
தவறவிட்டேன் நம் பொற்காலத்தை...
யுகமாய் காலம் கரைபுரள இங்கு
மொழியின்றி மெளனத்தில் உன்
மனம் படிக்கிறேன் நானும்..!