கவிதை - கண்ணாடி - இந்திரா
என் உதட்டில் சிரிப்பிருந்தால்
உன் உதட்டிலும்
சிரிப்பிருக்கும்
என் முகம் கோபம்
காட்டினால்
உன் முகமும் கோபம்
காட்டும்
என் கண்ணில் நீர்
வடிந்தால்
உன் கண்ணும் நீர்
வடிக்கும்
மற்றவர்களுக்காக
உள்ளொன்றும்
புறமொன்றும்
இல்லாமல்
என்னை நானாக
உணர்வது
உன்னிடம் மட்டுமே..
{kunena_discuss:779}