கவிதை - ஏன் பிரிந்தீர்... - தானு
என் இனிய கருணாநிதி தாத்தா அவர்களே இந்த இலங்கை பேத்தியின்
உங்களுக்கோர் கடிதம் ....
வண்ணத்தமிழ் வட்டமிட ஓவியமாய் நீர் இருந்தீர் கள்ளமற்ற பேச்சினிலே களங்கமற்ற நீரானீர்
இத்தனை நாள் எங்கிருந்தேன் உமை காணாது வாழ்ந்திருந்தேன்
எண்ணமதில் பதித்துவிட்டேன் தமிழ் வீரன் என்றே பெருமை கொண்டேன்
தெள்ளு தமிழ் பாட்டினிலே விந்தை செய்த தாத்தா நீங்கள் ஏன் பிரிந்தீர் நம்மை விட்டு சொல்லுமையா நீரெழுந்து .......
கண்களுக்குள் அருவி நீர்-அது
சிந்தனைக்குள் பொருமி வரும்
காலமெல்லாம் காத்திருப்போம் உமை
காணும் வரை பிரிவை ஏற்போம்
நேற்று உமை அறிந்த என் கண்கள் உயிர் துடிக்க அழுகுதென்றால் -உம்
மூச்சுக்காற்றில் வாழ்ந்த உயிர்கள் துடிக்கும் துயரம் நான் அறிவேன் தாத்தா
என் கல்லறை மேலும் பூ ஒன்று தலை வாரும் அது உமக்காய் முளைத்த கவிதை பூஞ்செடி ஆகும்......
மீண்டெழுக உயிர்த்தேழுக .....
ஆழ்ந்த அனுதாபங்களுடன் உங்கள் பேத்தி தானு...........
{kunena_discuss:779}