கவிதை - அவனுக்கான காத்திருப்பு - தானு
தென்றல் தீண்டுகையில் மலர் பறித்தாள் ...
மலரின் வாசனையில் தனை மறந்தாள்
விண்ணொளியில் சிறிது ஓய்வெடுத்தாள் ....
அங்கு சிறுக ஓடும் அருவியின் அழகில் நிலை கலைந்தாள்....
என்ன வியப்பில் ஆழ்ந்தாலும் அவன் வருகை ஒன்றை சிரத்தில் கொள்வாள்....
எதிர் பார்த்து மனம் பதைப்பாள்....
விரைந்த கணத்தில் கால்கள் கோலம் போட திடீர் தயக்கம் நிமிர்ந்து சற்றே பார்ப்பாள்
அவள் உள்ளம் பதை பதைக்க கன்னம் மொழு மொழுக்க சின்னப்பார்வையில் சிறை வைப்பாள்
{kunena_discuss:779}