கவிதை - நான் வருவது எக்காலம்? - தானு
நீள மலை தாண்டி
பல தேசம் நான் ஓடி
வந்தேன் நாலு பணம் தேடி
காடு மலை எல்லாம்
ஓடி திரிந்த என் கால்கள்
வாழ ஆசைப்பட்டு
அன்னிய தேசத்தில்
முடங்கியே போனதுவோ
நீலக் கடலழகி நித்தில சிரிப்பழகி
நெஞ்சம் துடிக்கிதடி
நினைவில் மயங்குதடி
வண்ண விழியழகி
உன் கன்னக் குழி விலகி
வெண்ணை திரளுமடி
என் ஏக்கம் கலைந்ததடி
சொல்லத் துடிக்குதடி
நெஞ்சில் நிறைகின்ற
நினைவோ பல கோடி நின்று எனை வாட்ட
நான் வருவதேக்காலம்????