(Reading time: 1 minute)

கவிதை - யாருமற்ற அவலை - தானு

lonely

உதடுகள் மட்டும் அவள் உணர்வுகளை
முணுமுணுக்கும்
உறக்கம் காணா விழிகளோ அவள் ஏக்கங்களை
விழிநீரில் கோலமிடும்

உறியில் இருந்து இறக்கிய
பானையில் உண்டோ
ஒரு பிடி அரிசி என்று 
ஒரு கரம் தேட

அவள் திரௌபதையுமல்ல
பானை அட்சயமுமல்ல
அங்கே தோன்றி அவள் பசி போக்க
கண்ணனும் இல்லை

சர்வதேசத்தின் கோழைத்தனத்தால்
கண்ணன் விழி மூடினான்
இவளோ இப்போது ஆதரவற்ற அவலை

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.