கவிதை - யாருமற்ற அவலை - தானு
உதடுகள் மட்டும் அவள் உணர்வுகளை
முணுமுணுக்கும்
உறக்கம் காணா விழிகளோ அவள் ஏக்கங்களை
விழிநீரில் கோலமிடும்
உறியில் இருந்து இறக்கிய
பானையில் உண்டோ
ஒரு பிடி அரிசி என்று
ஒரு கரம் தேட
அவள் திரௌபதையுமல்ல
பானை அட்சயமுமல்ல
அங்கே தோன்றி அவள் பசி போக்க
கண்ணனும் இல்லை
சர்வதேசத்தின் கோழைத்தனத்தால்
கண்ணன் விழி மூடினான்
இவளோ இப்போது ஆதரவற்ற அவலை