கவிதை - அன்பு - தானு
சில்லென்ற பனித்துளி தூறலில்
அன்பெனும் ஊற்றுப் பெருகும்
வில் போன்ற மழலைப் பேச்சினில்
அன்பெனும் உறவு பிறக்கும்
வீீர்ச்சொல் கொண்ட தமிழில்
அன்பெனும் வாசகம் உதிக்கும்
கல் போன்ற மனம் கொண்டோரில்
அன்பெனும் சொல் கூட இறக்கும்
அன்பெனும் வார்த்தைகள் செவிமடுத்தால்
என் கல்லறை மேலும் கூட பூக்கள் பூக்கும்