கவிதை - வரவுக்காய் - தானு
வண்டுகள் வட்டமிட்டு சித்திரமாய் பறந்து போக
விட்டத்தில் நின்று அவன் முகத்தை எண்ணி நான் இருக்க
வட்டமிட்ட வண்டுகள் என் கன்னத்திலே செல்லமாய் தட்டி
அவன் அழகென்ன நம்மை விட அழகோ என்று கேட்டு ரீங்காரமிட்டன
அவன் வானவில் பார்வையின் வண்ணங்களில் அன்றொரு நாள்
காலத்தை மறந்து நின்றேன்
விழிகள் மெல்ல அவன் விழிகளை நோக்கும்
காந்தப்பார்வை பாவை மனதை கொள்ளை கொள்ளும்
விறைத்த மார்பு அவன் வீரத்தை பேசும்
சிரித்த கன்னம் வரவுக்காய் காத்து நிற்கும்..
வளைந்த புருவம் என் விழிகளை அணைக்க அவை
புருவத்தில் ஒளிந்து கொள்ளும்
அவன் என்னை விட்டு நீங்க கூடாதென