(Reading time: 1 - 2 minutes)

கவிதை - வரவுக்காய் - தானு

Good-Husband

வண்டுகள் வட்டமிட்டு சித்திரமாய் பறந்து போக
விட்டத்தில் நின்று அவன் முகத்தை எண்ணி நான் இருக்க
வட்டமிட்ட வண்டுகள் என் கன்னத்திலே செல்லமாய் தட்டி
அவன் அழகென்ன நம்மை விட அழகோ என்று கேட்டு ரீங்காரமிட்டன

அவன் வானவில் பார்வையின் வண்ணங்களில் அன்றொரு நாள்
காலத்தை மறந்து நின்றேன் 

விழிகள் மெல்ல அவன் விழிகளை நோக்கும்
காந்தப்பார்வை பாவை மனதை கொள்ளை கொள்ளும்
விறைத்த மார்பு அவன் வீரத்தை பேசும்
சிரித்த கன்னம் வரவுக்காய் காத்து நிற்கும்..

வளைந்த புருவம் என் விழிகளை அணைக்க அவை
புருவத்தில் ஒளிந்து கொள்ளும் 
அவன் என்னை விட்டு நீங்க கூடாதென

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.