கவிதை - வறண்டு போன மனித மனங்கள் - தானு
வாழப்பிறந்த மனிதர்கள்
ஆயிரமாயிரம் ஜாதிகளாம்
கவி சோல்லி நான் சளைத்தென்
காரணங்கள் தேடுகின்றேன்
ஜாதிதான் சமூகம் என்றால்
வீசும் காற்றில் விஷம் பரவட்டும்
ஓடும் நதிகள் நின்று போகட்டும்
விரையும் கால்கள் முடங்கிக் கிடக்கட்டும்
விடை தெரியாத உலக மேடையில்
ஜாதிதான் சமூகம் என்றால்
காதல் மரிக்கட்டும்
சாதல் பிறக்கட்டும்
எத்தனை எத்தனை பெரியார்கள்
கத்திக் கத்தி மாண்டுப்போனார்
இன்னும் இத்தனை வீராப்பென்றால்
மொத்த உலகமும் அழிந்து போகட்டும்
{kunena_discuss:779}