கவிதை - நாளை நானும் வாழ வேண்டும் - தானு
வானத்து சூரியன் என்னை சுட்டெரித்தது
நிலவொளி என்னை பனிக்கட்டி ஆக்கியது
மலர்கள் வாசனை அதிகம் தந்து என்னை மூச்செறிக்கச் செய்தன....
ஆசையாய் வாங்கி உண்ட உணவு கூட
என் உடல் முழுதும் நோய் என்னும் உபாதையை தந்தது
காற்று வாங்க சென்றேன்
வேகப்புயலாய் என்னை தள்ளி விழுத்தியது..
மனிதனாய் வாழ ஒரு தனிமை இடம் நோக்கி பயணித்தேன் ..........அங்கு என் மனட்சாட்சி என்னை கேள்வி கேட்டு கொன்றது....நீ வாழ தகுதி இல்லாதவள் ...தனிமை கூட உனக்கு சொந்தமில்லை என்றது....
என்னை உலகமே சிறைப்படுத்தி கடைசி மூச்சின் விளிம்பில் நான்......நாளை நானும் வாழ வேண்டும் என்னை வாழ விடு உலகமே என்ற கடைசி வார்த்தைகளுடன்.....
{kunena_discuss:779}