கவிதை - பெயரிடப்படாத நட்சத்திரங்கள் - தானு
ஒரு கணம் வாழ்க்கை பாதையை வரைந்து பார்த்தேன்
விழிகள் ஆயிரம் உலகத்தை நோக்கி பயணிக்கின்றன...அதில் சில விழிகளே மனிதத்தை மதிக்கும் நோக்கில் பயணிக்கின்றன...
யார் உண்மையான வாழ்க்கை வாழ்கிறார்??
பட்டினியால் கிடந்தும் வாழ துடிக்கும் நெஞ்சம்தான் ஒரு உண்மையான நட்சத்திரம்...
நிலவெறித்த போதிலும் நிலவொழித்த இருளிலும் வெந்து கிடக்கும் மனிதமே உண்மையான நட்சத்திரம்...
கண்ணும் கருத்துமாய்
மண்ணைப் பண்படுத்தி
பக்குவமாய் அதை பசுந்தோட்டமாக்கி
அறிவு வேட்டையில் அங்கங்கே கிடைத்ததெல்லாம்
அடித்தளமாய் அமைய
வாழ்க்கைப்பாதையில் விழுத்திய கற்களெல்லாம்
கற்சுவராய் எழுப்ப
தன்னம்பிக்கையால் ஒரு வன் கூரையிட்டு
இல்லம் எழுப்பி வாழும் ஏழை அவனே உண்மையான பெயரிடப்படாத நட்ச்சத்திரம்
எனது குரல் ஒற்றையாய் ஒலிக்கும்
எனது உதிரத் துடிப்பு இருக்கும் வரை
இன்னும் பெயரிடப்படாத நட்சத்திரங்ளை வெளிச்சம் கொடுத்து உயிரூட்டுவதற்காய்...
{kunena_discuss:779}