கவிதை - இரவுகள் எழுதிய கவிதை - தானு
அச்சம் துக்கம்
அழுகை என்று இவற்றால்
என்னை உருக்கிய
இரவுகள் எழுதிய கவிதை
காற்றில் மிதந்த
இரத்தக் கண்ணீர்
விடியலை நோக்கி சீறிப்பாய
விழிநீர் வழிந்தோட
இரவுகள் எழுதிய கவிதை
இரும்புக் குழல்களில்
சிக்கி சிதைந்த உயிர்களின்
ஆத்மாக்களின் ஆதங்கம் எண்ணி
இரவுகள் எழுதிய கவிதை
வானத்து சூரியனும் கொதித்து எரிக்கும்
வாழ நினைத்த உயிர்களை
வாசல் வரை கொன்ற இனவாதம் நினைத்து
வாரி அணைத்த அன்னை முத்தம் எங்கே ஏங்கி
இரவுகள் எழுதிய கவிதை......
சோகச் சிதையில் மூட்டிய
தேகச் சிமிழி உடைந்தது.......
வானம் இருண்டது
மனம் விழிநீரால் நனைந்தது
அச்சம் துக்கம்
அழுகை என்று இவற்றால்
என்னை உருக்கிய
இரவுகள் எழுதிய கவிதை
{kunena_discuss:779}