(Reading time: 1 - 2 minutes)

கவிதை - இரவுகள் எழுதிய கவிதை - தானு

night

அச்சம் துக்கம் 
அழுகை என்று இவற்றால் 
என்னை உருக்கிய
இரவுகள் எழுதிய கவிதை

காற்றில் மிதந்த 
இரத்தக் கண்ணீர் 
விடியலை நோக்கி சீறிப்பாய
விழிநீர் வழிந்தோட
இரவுகள் எழுதிய கவிதை

இரும்புக் குழல்களில் 
சிக்கி சிதைந்த உயிர்களின்
ஆத்மாக்களின் ஆதங்கம் எண்ணி
இரவுகள் எழுதிய கவிதை

வானத்து சூரியனும் கொதித்து எரிக்கும்
வாழ நினைத்த உயிர்களை 
வாசல் வரை கொன்ற இனவாதம் நினைத்து
வாரி அணைத்த அன்னை முத்தம் எங்கே ஏங்கி
இரவுகள் எழுதிய கவிதை......

சோகச் சிதையில் மூட்டிய
தேகச் சிமிழி உடைந்தது.......
வானம் இருண்டது
மனம் விழிநீரால் நனைந்தது

அச்சம் துக்கம் 
அழுகை என்று இவற்றால் 
என்னை உருக்கிய
இரவுகள் எழுதிய கவிதை

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.